அன்பு குழந்தையே... இன்று உன் கண்ணீல் ஏற்பட்ட கண்ணீரையை கண்டு நான் கலங்கி நிற்கிறேன். உன் கண்ணீரில் உன் வாழ்க்கையில் உனக்கு ஏற்பட்ட வலிகளால் நீ துடித்து அனுபவித்த அந்த நேரத்தை நினைத்து என் மனம் தாங்காமல் நான் துடிக்கிறேன். உன் சூழ்நிலைகளும் உனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளும் உன்னை எந்த அளவில் பாதித்தது என்பதை என்னால் உணரமுடிகிறது. நினைத்தாலே உனக்குள் ஏற்படும் நடுக்கமும் பயத்தை பார்க்கும் நான் கண் கலங்கி நிற்கின்றேன். என் குழந்தை கோழை அல்ல. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தாங்கி நின்று கடந்து செல்லும் தைரியம் உனக்கு இருக்கிறது, நீ சமாளித்து நடைப்போட்டாலும் உன் மனதில் இருக்கும் குமுறலை வெளியே மற்றவர் உணராத வண்ணம் நீ நடக்கிறாய். கர்மவினை என் குழந்தையை கலங்க வைக்கும் போது நானும் உன்னுடன் தான் வலியை அனுபவிக்கிறேன். உன் சந்தோஷத்திலும் சரி துக்கத்திலும் சரி உன்னுடன் தான் இருப்பேன். உன் வலியை மாற்றுவேன் என் பிள்ளையின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன் உன் கண்ணீர் கவலை எல்லாம் முடியப்போகிறது. கூடிய விரைவில் உனக்கான வெற்றி இலக்கு காத்துக்கொண்டு இருக்கிறது. பந்தய கோட்டை எட்டும் தருவாயில் அது உன்னை சோதித்து பார்க்கும். உன் பலம் என்ன, நம்பிக்கை என்பது எந்த அளவில் இருக்கிறது என்று, அந்த கட்டத்தில் தான் நீ இருக்கிறாய், உன் வாழ்க்கைக்கு பொறுப்பாளி நானே உனக்கான அனைத்தையும் நான் உன்னிடம் வந்து சேர்ப்பேன். நீ அழாதே. உனக்கான அனைத்தும் தயாராக உள்ளது. அது மற்ற விஷயங்கள் போல நிலையற்றவை அல்ல. உன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கும் பொக்கிஷம். உன்னை நான் சரி செய்வேன். உன்னுடன் எப்போழுதும் நான் இருப்பேன்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...