Welcome,
Guest
. Please
login
or
register
.
Did you miss your
activation email
?
September 20, 2024, 07:19:23 PM
Home
Help
Gallery
Facebook
Login
Register
DwarkaMai - Sai Baba Forum
»
Sai Literature
»
Sai Thoughts
»
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Join Sai Baba Announcement List
DOWNLOAD SAMARPAN - Nov 2018
« previous
next »
Print
Pages:
1
...
4
5
[
6
]
Go Down
Author
Topic: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள் (Read 24649 times)
0 Members and 1 Guest are viewing this topic.
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #75 on:
November 02, 2016, 11:43:43 PM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப்
பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ,
யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை.
பாபாவின் ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை
- ஸ்ரீ சாயி சத்சரித்ரா
ஓம் ஜெய் சாய் ராம்
«
Last Edit: November 02, 2016, 11:56:28 PM by ShAivI
»
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #76 on:
November 04, 2016, 01:40:55 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
என் செல்லப்பிள்ளையே!
நீ இன்று வரை நடக்குமோ நடக்காதோ என தவித்துக் கொண்டு இருக்கிற
விஷயம் நிச்சயமாக நடந்துவிடும். பல நாட்களாக வைக்கப்படும் என்னுடைய
வேண்டுதல், தாமதமாகி தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்து விட்டது.
இவ்விதமாக இழுத்துக் கொண்டே போவது நன்று அன்று என நினைத்து
என் பாதத்தில் விழுந்து வலியையும் துன்பத்தையும் நிவர்த்தி செய்ய
வேண்டினாய். அது இதோ நிறைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி கூறும்
இரண்டு பைசாக்களை உன் கையில் பத்திரமாக வைத்துக் கொள். அது உன்னை
பாதுகாக்கும். நம்பிக்கை பொறுமை தான் அந்த பைசாக்கள். பொறுமையாக இரு
என்பதற்கு பொருள் அடிமையாக இருப்பதல்ல. அமைதியாக இருப்பதும் அல்ல.
விருப்பத்திற்கு மாறான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது அதை
சகித்துக்கொள்ளுகிற தன்மைக்கு தான் பொறுமை எனப்பெயர். என்ன நடந்தாலும்
நான் பொறுமையாக இருந்து அப்பாவிடம் முறையிடுவேன் என்று மட்டும்
சொல்லிக்கொள். அவ்வித பொறுமையை வளர்க்க என்னிடம் பிரார்த்தனை செய்.
இது உன் மன வலிமையை அதிகமாக்கி சகலத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
தன்னம்பிக்கை வளர இரண்டு விஷயங்கள் மட்டும் தேவை. தைரியம் அதில்
முதலாவது. இதை கடைபிடித்தால் எந்த வேலையும் சுலபமாக முடியும். அஞ்சாமை
வாழ்வு, அச்சம் மரணம் என்பதை நீ அறியமாட்டாயா? துணிவே வாழ்வின் துணை
என்பது உனக்கு தெரியாதா? ஆகவே முதலில் தைரியத்தை வளர்த்துக்கொல்.
அது கடவுளை உனக்குள் அழைத்து வந்து அமரவைக்கும். அடுத்து, சுயநலமின்மை
இருந்தால் எந்த ஒன்றும் இன்பமாக தெரியும். சுகமும் துக்கமும் உன்னை நெருக்காது.
தீமைகள் வந்தால் அது நம்மை பக்குவப்படுத்த வந்தது என நினைத்து அதை ஏற்று
தீர்க்கும் முயற்சியிலேயே பக்குவபட்டுக்கொள்ளும்.
தோல்வி தோல்வி என நினைத்துக்கொண்டு காலத்தை கடத்தாதே, இனி அந்த
வார்த்தை உன் வாயில் இருக்காது. ஆம் நீ ஜெயிக்க போகிறாய் அதுவும்
என் ஆசியோடு. சந்தோஷப்படு!
அன்புடன்
அப்பா சாயி பாபா
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #77 on:
January 28, 2017, 03:31:43 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு
முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.
விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில்
செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி. சாய்பாபா என்னும் மகத்தான
விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை
தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #78 on:
August 23, 2017, 05:16:32 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
என் அன்பு குழந்தையே வாழ்க்கை நினைத்து நீ திகைத்து நிற்கின்றாய்
வாழ்க்கை பற்றிய திகைப்பு எதற்கு என் பிள்ளையை நான் எப்படி திகைக்க
வைப்பேன் வாழ்க்கை என்பது ஒரு தோற்றம் உன்னை படைத்த தோற்றம்
உன் குணங்களின் தோற்றம் என தோற்றத்தின் அடிப்படையில் உன் வாழ்க்கையின்
அடிப்படை விஷயங்கள் அந்த தோற்றத்தை நீ எப்படி கைபிடிக்கிறாய் என்பதை
வைத்தே உன் வாழ்க்கையின் பக்கங்கள் இருக்கும் என்றும் மறக்காதே அந்த எல்லா
பக்கங்களில் உன் சாய்தேவா தான் எழுதுகிறேன் என்று உன் போக்கை நான் கவனித்துக்
கொண்டு தான் இருக்கிறேன் என் கண்ணில் இருந்து எதுவும் மறையாது என் குழந்தை
நீ நல்ல மனது கொண்டவர் உன் தவறுகளையும் நான் அறிவேன் அவை சரி செய்யவே
நான் இந்த விளையாட்டை உனக்கு நடத்தினேன் எதையும் அதிகமாக ஆராய்ந்து
பார்க்காதே வாழ்க்கையை நிம்மதியாய் வாழ முடியாது உன் வாழ்க்கைக்கு உன் சாய்அப்பா
பொறுப்பு என் பொறுப்பில் உள்ள பிள்ளையை நல்ல வழியில் வழிநடத்தி வாழ்க்கை
என்னும் பெருங்கடலை கடக்கச் செய்து கரை சேர்ப்பது தான் எனக்கு நிம்மதி நீ கடக்கும்
பாதை எப்படி பட்டதாய் இருக்கும் என்று நீ யோசிக்க வேண்டாம் அது உன் சாய்தேவா
காண்பிக்கற பாதை அதில் அவர் துணை எனக்கு உண்டு என்று மண்டும் நீ நினை உன்னை
பாதுகாப்பதற்கே நான் இங்கு உள்ளேன் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை
உன்னை விலகி போகும்படி நான் சய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக
என்றும் துணையாய் அரவணைப்பேன் !!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #79 on:
August 24, 2017, 01:47:43 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம் ஜெய் சாய்ராம்!
நான் விரும்புவதில்லை
நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக
மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எல்லா கேள்விக்கும்
நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும்,
அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #80 on:
September 04, 2017, 01:27:37 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓநீ எனக்கு மனதிலும், தாளிலும் எழுதிய கோரிக்கைகளை பார்க்கிறேன்,
கண்ணீர் முட்டுகிறது. என் பிள்ளைகள் சீர்கெட்டு போகிறார்களே என்ற
ஆதங்கத்தால், வயதாகி, குழி விழுந்த என் கண்களில் இருந்து கங்கை பிரவாகித்து
வருகிறாள். சக்தி என்னை விட்டு விலகி உட்கார்ந்து கொள்வதால் எனது கால்கள்
பலமிழந்து தள்ளாடுகிறது. குழந்தையே! எனதருள் உனக்கு பூரணமாக இல்லையென
நினைக்கிறாய், அப்படியில்லை. எல்லோருக்கும் எனது அருள் பூரணமாகவே
வழங்கப்படுகிறது. குழந்தைகளில் நல்ல குழந்தை கெட்ட குழந்தை என நான்
தரம் பிரிப்பது இல்லை. எல்லோரும் என் குழந்தைகள், நான் எல்லோருக்கும்
தாய் தந்தை. உனது நலன் மட்டுமே என் விருப்பம், இப்படி இருந்தும் நீ கஷ்டபடுவதற்கு
காரணம், என் மீது உனக்கு இன்னும் பூரணமாக வராத நம்பிக்கை. உனது பூர்வ ஜென்ம
வினைகளை முடித்த பிறகே நான் உன்னிடம் நிரந்தரமாக தங்கமுடிந்தது.
எனது லீலைகளை அனுபவிக்க ஆரம்பித்தாய். உன்னுள் தன்னம்பிக்கை வளர்ந்தது.
உனக்கு ஜெய்ப்போம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது பிடி தளர்ந்து நீ தள்ளாட
ஆரம்பித்திருப்பதற்கு காரணம், உனது அஜாக்கிரதை உணர்வு. குழந்தையே உங்களது
அஜாக்கிரதை உணர்வு, கவனமின்மை, அலட்சிய போக்கு போன்றவற்றை மாற்றிக் கொள்,
என் மீது மாறாத நம்பிக்கை வை அனைத்திலும் உனக்கு வெற்றி கிட்டும், அதைவிடுத்து
நான் உனக்கு அருள் புரிவதில்லை, நான் உன்னை கைவிட்டுவிட்டேன் என்றெல்லாம்
அசட்டுத்தனமாக யோசித்து என் மீது வெறுப்பை உமிழாதே! ஏனெனில் நீயாக என்னை
தேடவில்லை, நானே உன்னை தேடி வந்தேன். நீயாக என்னை வணங்கவில்லை
நானே வணங்க வைத்தேன். ஏன்? ஏனென்றால், நீங்கள் உணர்வுள்ளவர்கள், சன்மார்க்க
நம்பிக்கை உள்ளவர்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக
என்னோடு பூர்வ ஜென்ம பந்தம் உள்ளவர்கள். அப்படி இருக்க நான் எப்படி
உன்னை கைவிடுவேன்.....................
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #81 on:
September 11, 2017, 02:34:07 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம் ஜெய் சாய்ராம்!
அன்பு குழந்தையே..!
ஏன் காரணமில்லாமல் ஒரு விஷயத்தை நீ நினைத்து கொண்டு
இன்று புலம்பி வேறு எதிலும் உன் கவனத்தை திசை திருப்ப முடியாமல்
நின்று கொண்டியிருக்கிறாய் , உன் வாழ்க்கையில் எல்லாரையும் நேசி
அவர்கள் அன்பை புரிந்து கொள், அவர்கள் உன்னை காயப்படுத்தி இருக்கலாம் ,
உங்களை பற்றி தவறாக கூட பேசி இருக்கலாம் ,ஆனால் அவர்கள் உன்னை
நேசிக்கிறார்கள் ,உன் மனம் காயப்பட்டு இருக்கிறது ,உன் மனதில் கோபம்
எரிச்சல் வெறுப்பு இவை எல்லாம் பாலில் படிந்த ஆடை போல தான்
மேலொட்டமாக தான் இருக்கிறது ,அதை இன்று உனக்கு உணர வைத்தேன் ,
அதனால் உன் கோபத்தை விட்டு விடு ,உன் மனதிலும் பாசம் இருக்கின்றது,
அது தான் உண்மை உண்மையானதும் கூட ஆனால் உன் பாசத்தை நீ வெளியே
காட்டாதே, அது இருக்கும் இடம் தெரியாமால் இருந்தால் தான் உனக்கு மதிப்பு,
அதற்கும் மேல் உண்மையான அன்பை வெளியே காண்பிக்க வேண்டிய
அவசியமில்லை, உன்னோடு எல்லா சந்தேங்களையும் பிரச்சனைகளையும்
நான் தீர்த்து வைப்பேன், உன் அம்மாவாக அப்பாவாக நான் துணை நிற்பேன்...."
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #82 on:
September 12, 2017, 01:25:53 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
என் அன்பு குழந்தையே!
என் உயிரான என் பிள்ளைக்கு வாழ்க்கையின் வேகம் புரியவில்லை
தண்ணீர் எப்படி கீழே சிந்தினால் காய்கிறதோ அந்த அளவு சீக்கரமாக
நகர்க்கின்றது தான் வாழ்க்கை
எல்லாருக்கும் நல்ல நேரம் வாழ்க்கையில் வேகமாக வருகிறது
எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டமான நேரங்கள் என ஆதங்கப்படுகிறாயா
உன் வாழ்க்கையில் உனக்கானது உனக்கான சரியான நேரத்தில் நடைபெறும்
மற்றவர் வாழ்க்கையோடு உன்னை ஓப்பிடாதே அவர்களின் வாழ்க்கை
சாயல் வேறு உன் வாழ்க்கையின் சாயல் வேறு இரண்டையும் படைத்தவன்
நான் அதற்கான தேவைகள் எல்லாம் நேரம் வரும் போது நிச்சயம்
உன்னை வந்து அடையும்
பொறாமை நான் படப் கூடாது என்று நினைக்கும் போதே நீ அதில் இருந்து
விடுப்பட ஆரம்பித்துவிட்டாய்
எதற்காகவும் கலங்காதே உன்னையும் உன் குடும்பத்தையும் மீண்டும்
வேரூன்றி நிற்க செய்வேன்
அந்த வேரானது பூமியில் இருந்து மேலொங்கி வளர்ந்து நிற்கும் தன்மையுடையது
உன்னை மாற்ற எனது விருப்பங்களே இந்த நிகழ்வுகளெல்லாம் உன்னை எட்டி பார்க்கிறது
உப்பும் சீனியும் பார்ப்பற்கு ஓன்றாக இருக்கும் அதை வெறுப்படுத்தி பார்க்க
தெரிந்தால் தான் அது என்ன என்பது உனக்கு புரியும்
அதே போலவே தான் உன்னிடம் நிறை குறை என்ன என்பதை சூழ்நிலைகளில்
தான் உணர முடியும்
அதை புரியவைக்க தான் இவ்வளவு நிகழ்வுகளை நடத்தி வைக்கிறேன்
என் பொறுப்பு நீ நிச்சயம் நீ ஜெயமாக வாழ்வாய்
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் எப்போதும் உனக்கும் உன்னை
சார்ந்தவர்களுக்கும் உண்டு
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி
நான் செய்வதும் இல்லை
ஏனென்றால் நீ என்பது நான் என்ற என் சாய்தேவா என்பதை நீ உணர ஆரம்பித்த
அந்த நொடியில் இருந்தே என் உயிராய் ஆகிவிட்டாய் நீ
என்றும் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இருதயத்தின்
கருவறையில் சுமந்து அரவணைத்து வளர்ப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #83 on:
December 25, 2017, 07:05:27 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
என் அன்பு குழந்தையே!!!
வாழ்க்கையில் நீ என்னை அறியும் முன்பாக உன்னை நான் அறிந்தேன் !
அப்படி இருக்கையில் உனக்கு எது சரி எது உனக்கானது இல்லை
என்பது எனக்கு தெரியும்!
உன் உருவத்திற்கு உன்னுடைய ஜென்மம் புதியதாய் உறவுகளும்
பந்தம்களும் புதியதாய் இருக்கலாம் ,ஆனால் உன் நீ எடுத்த எல்லா
ஜென்மத்திலும் நீ என் பிள்ளை !
உன் உச்சிமுதல் நுனி கால் வரை நான் அறிவேன் !
உன்னை எப்படி நல்வழி படுத்தவேண்டும் என்று உன் மனதில்
எந்த வகையில் உனக்கு நான் காண்பித்தால் நீ நேர்மறை வழியில்
வருவாய் என்பதை நான் அறிவேன் !
உன்னை சேர்க்க வேண்டிய இடத்தில் உனக்கான சுற்றத்தில்
உன்னை அனுமதிப்பேன்,உனக்கு எது நல்லதோ அதை மட்டும்
தான் உன்னிடத்தில் நான் அனுமதிப்பேன் !
நீ எதை தேடி என்னிடத்தில் நோக்கினாய் அதை உன்னிடத்தில்
உனக்கு நிச்சயம் அருளுவேன் !
உன்னிடத்தில் சுலபமாய் உனக்கு கிடைக்கும் விஷயம் அதை
உதாசீனப்படுத்தாதே அது இல்லாதது போது தான் அதன் அருமை உனக்கு புரியும்!
வேணாம் நீ சொல்லும் விஷயங்களில் உனக்கான நல்லது நிறைந்து
இருக்கும் ஆனால் அதற்கான உழைப்பு அதிகம் ,அதை உன் மனம்
விரும்பாது கடினமான விஷயங்களில் ஈடுபட ஆனால் அவைகள்
உன் மனதை நேர்வழிப்படுத்தும் உனக்கு நல்லதாய் அமையும்்!
நீ வைர கல் உன்னை வடிவம் கொண்டு வந்து வெளிச்சத்தின் பேர்
ஔியை போல் வீசவே நான் உனக்கு இவற்றை எல்லாம் நிகழ்த்துகிறேன்்!
நீ இந்த துவாராகமாயீ தாய் தேக்கத்திலும் குருதிலும் இருந்து பிறந்த
என் உயிரே நீ தான் என் பிள்ளையே !
உன் சாய்அப்பாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல்
இனிமேல் என் நாவில் தோன்றும்் சொற்களின் பேர் அருளை பெறுவாய் !
அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம்
வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன் !
நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு
நான் இருப்பேன்்!
உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா
துவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும்
அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன் !
நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான்
என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ
அன்றே நீ என் உயிரான பொறுப்பு!
உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும்
உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு
உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது
என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன் !
அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும்
உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன்!
என் பிள்ளை என்னிடம் அடம்பிடிக்கும் கோபப்படும் சண்டையிடும்
அதே போல் அழும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்
பிள்ளைஎன்றால் தன் தாயிடம் தான் இப்படி நடந்து கொள்ள
முடியும் நீ உன் துவாரகாமாயீ தாயிடம் நடந்து கொள்கிறாய்
உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது உன் அழுகையில்
என் கண்ணீரும் இருக்கிறது உன் சண்டையில் என் மேல் நீ கொண்ட
தாயின் உரிமை இருக்கிறது அடம்பிடிக்கும் போது உனக்கான
பக்குவத்தை நல்லது கெட்டது தெரிய வைக்க வேண்டும் என்றும்
உன் கோபத்தில் உன்னை அமைதியாகி உன்னை நல்வழி படுத்த
வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும்
உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது!
இதற்கு உன் மேல் கோபம் கொள் மாட்டேன் அதை தாண்டி
என் கோபம் இருந்தால் நிச்சயம் அது உன்னை மாற்றவே நல்ல
வழியில் என்பதற்கே பொருந்தும் !
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி
போகும்படி நான் செய்வதும் இல்லை !
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா செல்வ வளங்களைப்
பெற்று சீரும் சிறப்புமாய் நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான
வாழ்க்கையை பெறுவாய்!
உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இருதயத்தின்
கருவறையில் சுமந்து அரவணைப்பேன்!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #84 on:
January 18, 2018, 12:53:30 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின்
ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை
உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை
சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து
கவனித்துக் கொள்வேன்!" என்பார்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற
உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற
விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை
தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும்
கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #85 on:
January 28, 2018, 10:18:36 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
விளக்கில் தீபம் ஏற்று என்று நான் உன்னிடம் சொல்ல காரணம்,
நீ ஏற்றுவதாய் நினைக்கும் விளக்கு நான் உன் சாய்தேவா
உனக்காக ஏற்றுவது,அதற்கு ஊற்றப்படும் எண்ணெய் என்பது
உன் கண்களுக்கு தான் ,ஆனால் என்னை பொறுத்த வரையில்
அது உன் கர்மாக்களால் நீ கண்ணீர் விட்ட துளிகள் அதை திரி
என்ற கர்மாக்கள் கொண்ட ஆயுதத்தால் நனைத்து நெருப்பால்
அதை பொருத்தி உன் கண்களுக்கு ஔி தரும் நேர்மறையாய்
உன் எண்ணங்களை அதில் இருந்து தந்து உன்னை சூரியன்
சூழ பிரகாசமாய் ஜொலிக்க வைக்கவே இந்த விளக்கு உனக்கான
விளக்கு உன் தாயாய் தந்தை உனக்கான நான் தரும் ஔி !
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #86 on:
February 06, 2018, 01:15:39 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
கொட்டிக்கிடக்கும் எனது பொக்கிஷங்களுக்கு உன்னை கூட்டிச்
செல்ல நினைக்கிறேன் நீயோ உலக பொருட்களுக்காகவே
என்னை நாடிக் கொண்டிருக்கிறாய். நானும் உன் வேண்டுதல்
அனைத்தையும் உனக்கு வழங்கி கொண்டிருக்கிறேன் ஏன் தெரியுமா
நீ எல்லாவற்றிலும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக தான்.
உன்னிடத்தில் எனக்கு ஒரு சிறு குறை உண்டு. அதை நீ சரி
படுத்திக்கொள்வாயா?
உனது சாயி பக்தி என்னையும் பிறரையும் வசியபடுத்துவது போலவே,
உன்னுடைய மனதுக்குள் யாரும் தெரியாது என ஒளித்து வைத்திருக்கிறாயே
கபடம், சுயநலம் போன்ற குணங்களை! அது என்னை வருத்தபட வைக்கிறது.
இதை நான் அறிய முடியாது என நினைக்கிறாயா?
நான் பற்றற்றவனாக இருந்தும் எனது சிந்தனைகள் செயல்கள் அனைத்தும்
உங்களை பற்றியே இருக்கவில்லையா? உங்களை கடைத்தேற்றுவதாக
சங்கல்பம் செய்துகொண்டு நான் உங்கள் கூடவே இருக்கவில்லையா?
என் பிள்ளைகளின் இதயக் குமுறலை கேட்க சகிக்காமல் அவர்களுக்காக
நான் இரங்கி இரங்கி ஏழையாகவில்லையா? நீ முற்றிலும் என்னை போலாக
வேண்டாம் ஆனால் எனது அடிச்சுவட்டையாவது பின்பற்றலாம் அல்லவா
அதற்காகதானே நான் உன்னிடம் வலிய வருகிறேன்.
உன்னிடம் இருப்பதை, உனக்கென இருப்பதில் கொஞ்சம் தானம் செய், நீதியை
போதனை செய், உன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை களைந்துவிடு.
அப்போது என் பேரருள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உன்னை வந்தடையும்......... . !
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #87 on:
February 08, 2018, 06:50:36 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம்ஜெய்சாய்ராம்!
அன்பு குழந்தையே.. வாழ்க்கையில் உள்ள அனைத்திற்கும் இரு வழிகள்
இருக்கும் அப்படி இருக்கையில் உன் பிரச்சினைக்கான காரணங்களும்
அது வந்த வழியையும் நான் அறிவேன். வந்த பிரச்சினை என்றும் நிலைக்க
போவது இல்லை. உன்னிடத்தில் அப்படி இருக்கையில் நிலையில்லா இருக்கும்
விஷயத்திற்கு ஏன் உன் பொக்கிஷமான நேரத்தை தொலைத்துக் கொண்டு
இருக்கிறாய். அவைகள் வந்த வழியிலே செல்ல போகிறது ஆனால் அவைகள்
உன் மனதில் ஏற்படுத்திய பக்குவம் அனுபவம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்
என்ற பாடம் என எல்லா நல்ல விஷயங்களையும் உனக்கு புகட்டி உள்ளது.
ஒரு குழந்தை எழுந்து நடக்க பயிலும் போது ஆயிரம் முறை கீழே விழும்
ஆனால் கடைசியில் தான் தன் காலை ஊண்றி நடக்கும்.
அவற்றை போலவே தான் நீ கீழே விழலாம் ஆனால் அது எழுந்து நிற்பதற்கு
என்பதை புரிந்துக் கொள். இந்த துவாராகமாயீ தாய் தேகத்திலும் குருதியிலும்
இருந்து பிறந்த என் உயிரே நீ தான் என் பிள்ளையே. நீ உன்னில் பார்க்கும்
அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். என் பரிபூரண
அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ . நீஎல்லா செல்வ
வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் நல்ல பெயருடன் நிம்மதியான
மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #88 on:
February 20, 2018, 04:30:11 AM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம் ஜெய் சாய்ராம்!
அன்பு குழந்தையே.... உன் மனம் எப்படி என்பதையும் உன் சூழ்நிலைகள்
அதை எப்படி திசை மாற்றி உன்னை சித்தரிக்கிறது என்பதையும் நான் அறிவேன்.
உன் மனமானது காயப்பட்டு ரணமாகி உள்ளது. உனக்கான பாதுகாப்பாய் உன்னையும்
உன் குடும்பத்தையும் என் உயிராய் நான் சுமக்கிறேன். பின்பு எப்படி உங்களை
நான் நிற்கதியாய் தவிக்கவிடுவேன். உன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதையை
சற்று யோசித்து பார். வித்தியாசம் நிறைய இருக்கின்றன என்பதை நீ புரிந்து கொண்டாயா.
ஒரு பூ பூக்க அது மொட்டாய் இருக்கும் போது அது பூவாய் மலர அது எதிர்கொள்ளும்
விஷயங்கள் என்ன என்பதை நீ அறிவாயா. அதுவும் உயிருள்ள ஒரு ஜீவன் தான்.
ஆனால் அதுக்கான நேரம் இவ்வுலகில் என்பது ஒரு நாள் தான். அது பூவாய் பூக்கும்
அற்புதத்தை யாரும் கண்டதில்லை. அப்படி ஒரு நாள் ஆயுள் கொண்ட அந்த மொட்டு
பூவாய் பூக்க அது சந்திக்கும் விஷயங்கள் அதிகமான சூரிய வெளிச்சம,் அதிகமான
மழை ,பனி. சில நேரம் அதற்கு சூரிய வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் கூட
போகலாம். ஆனால் இவை எல்லாம் அதற்கு சவாலான விஷயம் தான் அதை தாண்டி
அது பூக்கிறது. இப்படி ஒரு நாள் ஆயுளாய் கொண்ட பூ இவ்வளவு தைரியமாய்
செயல்படுகிறது என்றால் உன்னால் வாழ்க்கையில் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும்
கடந்து அதில் உன்னால் வெற்றி என்ற மலராய் பூக்க முடியும். உனக்கு துணையாய்
நான் இருப்பேன் என் கருவில் இருக்கும் என் உயிரில் கலந்த உயிர் குழந்தை
ஒரு தாய் இப்படி தன் உயிரின் ரூபமாய் அந்த குழந்தையை உணர்வார்களோ
அதை போலவே இந்த துவாரகமாயீ தாயும், உன் சாய்தேவாவின் இதய துடிப்பே நீ தான்.
உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணையாய் அரவணைப்பேன்
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
ShAivI
Members
Member
Posts: 12140
Blessings 56
बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
«
Reply #89 on:
February 21, 2018, 11:35:11 PM »
Publish
ஓம் சாய் ராம்!!!
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
ஓம் ஜெய் சாய்ராம்!
அன்பு குழந்தையே....
நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழகிகொள் எதற்காகவும் கவலைபடாதே.
எதுவும் இல்லை என்றோ, என்ன நடக்குமோ, என்ன பேசுவார்களோ,
என்னிடம் இல்லையே, இப்படி சொல்வதை தவிர்த்து விடு
என்னிடம் ஒப்படைத்து விடு. உனது அனைத்து பாரத்தையும் நான்
தாங்கிக் கொள்கிறேன்.
எனது கண்மணிகள் ஒருநாளும் கலங்க கூடாது அப்பா நான் இருக்கிறேன்
எதற்காக கவலை படுகிறாய்.
எதற்கும் அஞ்சாதே எதுவும் நடக்காது. எவரையும் நெருங்க விடமாட்டேன்.
உனது சுவாசத்தை கூட எனது அனுமதியின்றி எவரும் சுவாசிக்க முடியாது.
எவரும் உன்னை தவறாககூட பேசவிடமாட்டேன்.
நீ தேவை இல்லாமல் பயப்படுகிறாய். உனக்கு தேவைபடும் அனைத்தும்
உன்னை வந்து சேரும்.
இருப்பதை வைத்து சிந்தித்து வாழகற்றுக் கொள் அனுசரித்து போ அதில்
ஒன்றும் தவறில்லை.
நாளை உனது தலைமுறை செம்மையாகும்.
அவசரபடாமல் இரு. அனைத்தும் உன்னை தேடி வந்து சேரும் காலம் நேரம் .
எதிரிகள் இல்லை உனக்கு. இருந்தாலும் ஓடி ஒழிந்து விடுவார்கள்.
விரைவில் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்பட்டு கண்களில் நீர் வழிய எனது
வருகைக்காக காத்திருப்பாய்.
எனது புன்னகைக்காக காத்திருப்பாய். எனது முகத்தில் ஏற்படும் புன்னகையை
காண்பதே ஒருவிதமான அதிர்ச்சி.
எவருக்கும் அந்த பாக்கியம் எளிதில் கிடைக்காது. இன்றும் எனது அசைவிற்க்காக
அனைத்து ஜிவராசிகளும் காத்துக்கொண்டு இருக்கிறது
கவலைபடாதே அப்பா நான் இருக்கிறேன்.
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
ஓம் ஜெய் சாய் ராம்
Logged
JAI SAI RAM !!!
Print
Pages:
1
...
4
5
[
6
]
Go Up
« previous
next »
DwarkaMai - Sai Baba Forum
»
Sai Literature
»
Sai Thoughts
»
ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Facebook Comments